தொடர்ந்து, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார், மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், கடலோர காவல் படை எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் 10 பேர் கொண்ட காவலர்கள் படகுகளில் கடலுக்குள் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி 4 முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதும் பிடிபடவில்ல, என்று போலீசார் தெரிவித்தனர்.
The post மாமல்லபுரத்தில் 2வது நாளாக ‘‘சாகர் கவாச்’’ பாதுகாப்பு ஒத்திகை: இசிஆர் சாலையில் போலீசார் வாகன தணிக்கை appeared first on Dinakaran.