தர்மபுரி, டிச.1: தர்மபுரியில் 39 வயது பெண்ணின் ஆதார் கார்டில், 100 வயது என தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி சின்னசாமி. இவரது மனைவி சாந்தி(39), நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன், எனக்கு ஆதார் அடையாள அட்டை எடுத்தேன். அதில், பிறந்த ஆண்டு 1921 என்றும், வயது 39க்கு பதில் 100 என்றும் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தது. வயதை தவறாக பதிவு செய்துள்ளதால், அரசு நலத்திட்டங்கள் எதையும் என்னால் பெற முடியவில்லை.