மகா பரணி தீபம்தர்மபுரி, நவ.30: கார்த்திகை தீபத்திருவழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயிகளில் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்பட்டது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலையில் மகா தீபம் ஏற்றபட்டது. இதை தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி கோயிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது.