கரூர், நவ. 27: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஜெயராஜ், கணேசன், விஸ்வநாதன், வெங்கடேசன், சாமுவேல் சுந்தரபாண்டியன், ஜான்பாட்ஷா உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.