ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா

கரூர், ஏப். 18: ராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமனின் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும். இந்த விழா, வசந்த காலத்தில் சைத்ர நவராத்திரியின் ஒரு பகுதியாகும். ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி வெண்ணெய் ஆத்நேச ஆஞ்சநேயர் கோயிலில் 16 வகை மலர்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நினைத்த காரியம் நிறைவேற சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா appeared first on Dinakaran.

Related Stories: