பாப்பிரெட்டிப்பட்டி, நவ.27: பாப்பிரெட்டிபட்டி அருகே, சமையல் காஸ் கசிந்து தீப்பிடித்து கணவன், மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வரதகவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (77) விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், வெங்கடாசலம், ராமாயி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வெங்கடாசலம் சமையலறையில் காஸ் பற்ற வைத்த போது திடீரென தீ பிடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. ஏற்கனவே காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்த நிலையில் அதனை அறியாமல் தீ பற்ற வைத்ததால் தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.