கோவை, நவ. 23: கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள உணவகத்தில் வாங்கிய உணவில் இறந்த நிலையில் எலி குட்டி இருந்ததால் அதனை சாப்பிட்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவரின் தம்பி கார்த்திகேயன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் கோவை அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள ஓட்டலில் தம்பிக்கு ஆப்பம், சாம்பார் வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிடும்போது சாம்பாரில் கத்திரிக்காய் இருப்பதாக நினைத்து கார்த்திகேயன், அதை சாப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.