போதை மாத்திரை விற்றவர் கைது

கோவை, ஏப்.23: கோவை போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிச்சி பிரிவு அருகே சந்தேகம்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப் (32) என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post போதை மாத்திரை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: