கத்திகாட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது: தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

கோவை ஏப்.18: கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள தோப்பு கவுண்டர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). இவர், வெல்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் அதே பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த பீளமேடு நேரு நகரை சேர்ந்த சூரிய பிரசாத் (24) பிரஜீத் பிரசாத் (24) ஆகியோர் கத்தி காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்தனர். இது தொடர்பாக செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.இதேபோல் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23). இவர், அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர், கடையில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (27) மற்றும் கமலேஷ் (27) ஆகியோர் அங்கு வந்தனர்.‌ அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். விஜய் பணம் தர மறுத்தபோது கத்தியால் கையை கீறி விட்டு கடையில் இருந்த 4500 ரூபாய் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக விஜய் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர் கமலேசை தேடி வருகின்றனர்.

The post கத்திகாட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது: தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: