வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்

 

கோவை ஏப்.26: கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (45). இவர், தேனி மாவட்டத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் இவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பக்கத்தில் வீட்டில் வசிப்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர், உங்கள் வீடு தீப்பிடித்து எரிவதாக தெரிவித்தார்‌. இது தொடர்பாக கோவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். வீட்டில் வைத்திருந்த பத்திரம், துணி, நகைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமானது. இது தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  மின் ஒயர் பழுது காரணமாக தீப்பிடித்ததா?, வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: