சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது

 

சூலூர்,ஏப்.24: சூலூர் காங்கயம் பாளையம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக புதிதாக ஒரு டீக்கடை திறக்கப்பட்டது. அதில் டீ மாஸ்டராக ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த அருள் என்பவரது மகன் கார்த்திக் ராஜா (22) வேலை செய்து வந்துள்ளார். அப்போது தேநீர் கடையின் அருகில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 13ம் தேதி அவரை கேரளாவிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.அதேபோல், கலங்கல் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருபவர் செல்வராஜ் (52.)

இவர் அவரது மில்லின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், செல்வராஜை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: