கலெக்டர் அறிவிப்பு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 22: கரூர் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மதியழகன், சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன், கரூர் கோட்டச் செயலாளர் சுப்ரமணியன், கரூர் கிளைச் செயலாளர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். கரூர் கிளை பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

கேங்மேன் பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களை கள உதவியாளர் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டும். விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலியை வாரியமே நேரிடையாக வழங்க வேண்டும். கரூர் மின் வட்ட களப்பணியாளர்களின் பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: