கரூர், நவ. 22: கரூர் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மதியழகன், சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன், கரூர் கோட்டச் செயலாளர் சுப்ரமணியன், கரூர் கிளைச் செயலாளர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். கரூர் கிளை பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.