கெரிகேப்பள்ளி அரசு பள்ளிக்கு ₹56 ஆயிரம் மதிப்பில் இலவச பெஞ்ச், டெஸ்க்

கிருஷ்ணகிரி, நவ.21:மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க போதுமான பெஞ்ச், டெஸ்க் இல்லை. இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், ₹56 ஆயிரம் மதிப்பில் பெஞ்ச் மற்றும் டெஸ்க்கை நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பள்ளி தலைமை ஆசிரியரின் முயற்சியால், கடந்த ஆண்டு 68 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 131 ஆக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பாராட்டும் வகையில் இந்த பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். தலைமை ஆசிரியர் வீரமணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: