கரூர், நவ. 20: தினகரன் செய்தி எதிரொலியாக கரூர் பொன்நகர் பிரிவு அருகே வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் ராயனூர் பகுதியில் இருந்து திருச்சி பைபாஸ் சாலை செல்லும் வழியில் பொன்நகர் பிரிவு உள்ளது.நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வந்தன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அல்லது பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என நவம்பர் 18ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.