தர்மபுரி, நவ.11: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பல முறை வலியுறுத்தியும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சம்பளம் தரக் கோரி துப்புரவு பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், பஞ்சாயத்து தலைவர் சம்பளம் வழங்க மறுத்ததோடு இம்மாத சம்பள பணம் மட்டுமே வழங்க முடியும். நிலுவை சம்பளத்தை தரமுடியாது எனக் கூறியுள்ளனர்.