கரூர், நவ. 9: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள ஈரோடு சாலை ஆசாரிப்பட்டறை அருகே 4 யூனிட் மணல் ஏற்றிய நிலையில் லாரி நிற்பதாக இந்த பகுதி விஏஒ வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.