கலெக்டர் மலர்விழி பேட்டி கல்லறை திருநாள்: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

கரூர், நவ. 2: கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கல்லறை திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களை பிரார்த்தனை செய்து வழிபடும் வகையில் ஆண்டுதோறும் இந்த நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூரில் பாலம்மாள்புரம், வெங்கமேடு போன்ற பகுதிகளில் உள்ள கல்லறைகளுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் நேற்று சென்று சுத்தம் செய்து, பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்து வழிபாடு நடத்தினர். கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: