தர்மபுரி, அக்.28:தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தலைவர் திருமாவளவன் மீது பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் கலந்து கொண்டு பேசினார். மின்னல் சக்தி, குண்டுசக்தி, மன்னன், கப்பல் செந்தில்குமார், சாக்கன்சர்மா, ஜெகநாதன், வடிவேல், அம்பேத்வளவன், கிள்ளிவளவன், மாநில நிர்வாகி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.