விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 28: விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா, கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டதோடு, 200க்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: