தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தங்கராஜ், மண்டல செயலாளர் முனிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.