₹11.50 லட்சம் மதிப்பில் அரசு மகளிர் பள்ளிக்கு கழிவறை கட்டும் பணி செந்தில்குமார் எம்பி பங்கேற்பு

அரூர், அக்.18: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹11.50 லட்சம் மதிப்பீட்டில், நவீன கழிவறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன், முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், கிருஷ்ணகுமார், சிட்டிபாபு, செல்லதுரை, சண்முகம், அன்பழகன், டாக்டர் சுரேஷ்குமார், சின்னசாமி, விண்ணரசன், திருவேங்கடம், சக்திவேல், ஜோதி, பெருமாள், தலைமை ஆசிரியர் செல்வமணி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: