காரிமங்கலம் கொல்லுப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சரிதா (42), நேற்று முன்தினம் நிலத்தில் சோளப்பயிர்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சரிதாவை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.