அண்ணா பல்கலை துணைவேந்தரை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி, செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரமோகன், மாணவரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஸ்குமார், சிட்டிபாபு, பிரகாஷ், முல்லைவேந்தன், முத்துகுமார், அண்ணாதுரை, ஜெயக்குமார், பாலாஜி முன்னிலை வகித்தனர். தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், திமுக மாவட்ட அவைத்தலைவர் ஜிவி மாதையன்,

மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, வக்கீல் முனிராஜ், பொருளாளர் தர்மச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கேஎஸ்ஆர் சேட்டு, எச்சனஅள்ளி சண்முகம், சித்தார்த்தன், தேசிங்குராஜன், சிவப்பிரகாசம், சிட்டிமுருகேசன், பிகே முரளி, முருகன், கிருஷ்ணகுமார், பிரபு ராஜசேகர், காவேரி, சந்திரமோகன், ரஹீம், குபேந்திரன், லட்சுமணன், வீரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் எம்பி செந்தில்குமார் பேசுகையில், ‘மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் பல்கலை துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,’என்றார்.

Related Stories: