தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் 25 வயது தூய்மை பணியாளர், பொம்மிடியில் 15 வயது சிறுமி, 70 வயது முதியவர், 14 வயது மாணவர், 62 வயது மூதாட்டி, தாளநத்தம் பகுதியில் 29 வயது போலீஸ் ஏட்டு, மெணசியில் 50, 29, 18 வயது பெண்கள், அரூர் கீழனூரில் 30 வயது தூய்மை பணியாளர், பாலக்கோடு சிகரலஅள்ளியில் 20 வயது மாணவர், தர்மபுரி குப்பூரில் 32 வயது பெண், பில்பருத்தியில் 23 வயது இளைஞர், பாளையம்புதூரில் 45 வயது கூலி தொழிலாளி, நல்லம்பள்ளியில் 48 வயது கூலி தொழிலாளி உள்ளிட்ட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.நேற்று ஒரே நாளில் மொத்தம் 3,818 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 2877 பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பினர். 915 பேர் அரசு மருத்துவமனை, வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.