விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.1:வத்தல்மலை பல்நோக்கு கூட்டுறவு சங்க முதன்மை அமைப்பை மாற்றி அமைக்க கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் மாதையன், பிரதாபன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ராஜூ, ஒன்றிய செயலாளர் பச்சாகவுண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த பின்னர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Related Stories: