கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தேதி மாற்றம்

கோவை, செப். 30: தமிழ்நாடு தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கான வீடியோ கான்பிரன்சிங் முறையிலான ஆய்வு கூட்டம் வரும் 1ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆய்வு கூட்டம் வரும் 9ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும் என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அலுவலர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories: