பொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியில் கடந்த சில மாதமாக போலீசார் முக்கியமான சாலைகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இதில் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் விதிமீறி வருவோர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்வது அதிகரித்துள்ளது. அதிலும், கோவை, உடுமலை, மீன்கரை, கோட்டூர் ஆகிய ரோடுகளில் பைக் ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், முறையான ஆவணம் இல்லாமலும், அதிவேகமாக வரும் வாகன ஒட்டிகளுக்கும் அபராத விதித்து வருகின்றனர்.