கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில், கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒரு கிலோ கோழி ₹10க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மாநில எல்லையோரம் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு நோய் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள 22 சினிமா தியேட்டர்கள், வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்களான கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காக்கள் வெறிச்சோடியுள்ளது.