தர்மபுரி, மார்ச் 19: பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(48). இவர் பெரியாம்பட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெரியாம்பட்டியிலிருந்து சொந்த ஊரான திருமல்வாடிக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 அரை பவுன் நகை மற்றும் 5000 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, அறுமுகம் மனைவி சிவகாமி பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.