காரிமங்கலம், மார்ச் 18: காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் பைபாஸ் சாலையில் அட்டை பெட்டி தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை கம்பெனியின் பாய்லர் மற்றும் பைப்லைன் வெடித்துள்ளது. இந்த விபத்தில், பணியில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அய்யப்பன்(24), பெரியாம்பட்டியை சேர்ந்த சசிகுமார்(31), அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்(27) உட்பட 4பேர் படுகாயமடைந்தனர்.