தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி மாவட்டம் அரூரில் சாலை விபத்து கோப்புகள் கையாள்வதற்கு, போக்குவரத்து போலீஸ் ஏட்டு 7ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக அதிரடியாக சஸ்பெண்ட் செய்து, தர்மபுரி எஸ்பி ராஜன் உத்திரவிட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் போக்குவரத்து பிரிவில், போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கந்தசாமி (57). இவர் கடந்த 2 ஆண்டுகளாக, அரூர் பகுதியில் பணியாற்றினார். சமீபத்தில் நடந்த ஒரு ஆட்டோ சாலை விபத்து வழக்கை போலீஸ் கந்தசாமி விசாரித்தார். அப்போது இந்த வழக்கை கையாள்வதற்கு, விபத்தை ஏற்படுத்தியவரிடம் லஞ்சமாக 15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதில் ஒருபகுதி தொகையான ₹7ஆயிரத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீஸ் ஏட்டு கந்தசாமி வழங்கியுள்ளார்.