காரிமங்கலம், மார்ச் 17: காரிமங்கலம் அடுத்த பூனார்த்தனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் ரூபாதேவி(23). தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி தான் படித்த கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் எஸ்ஐ விஜயசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.