கரூர், மார்ச் 13: வெங்கமேட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் வெங்கமேட்டில் இருந்து தினமும் வேலைக்காகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்னிறனர். காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களாலும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.