தேமுதிக நகர செயலாளர் திமுகவில் இணைந்தார்

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில், தேமுதிக நகர செயலாளர் அன்புவிஜய் திமுகவில் இணைந்தார். தர்மபுரி நகர தேமுதிக செயலாளர் அன்புவிஜய், அக்கட்சியில் இருந்து விலகி, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ முன்னிலையில், திமுகவில் இணைந்தார். அவருக்கு தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் மோகன், சிட்டி சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: