தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி அருகே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அருகே, முக்கல்நாயக்கன்பட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், ₹1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த கூடத்தில், கிராமப்புற தூய்மை பணியாளர்கள் 5 பேர், மண்புழு உரம் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன் இந்த கூடத்தின் மேற்கூரை சூறைக்காற்றுக்கு சேதமானது. மேலும், இதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு திரைகளும் கிழிந்தன.