கடத்தூர், மார்ச் 12: கடத்தூர் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பூ செடிகளுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் வேறு வேலை தேடி சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே தற்போதும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பகுதியில் சரியான மழை இல்லாததால், கோடைக்கு முன்னரே, கிணறுகள் முற்றிலும் வறண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைவான தண்ணீரை கொண்டு மாற்று பயிர்களான தட்டை பயறு, பூச்செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.