கடத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கடத்தூர், மார்ச் 12: கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடத்தூத்துரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில், பள்ளி சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: