தர்மபுரி, மார்ச் 11: தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில், கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சுமதி கலந்துகொண்டு கூட்டத்தினை தொடங்கி வைத்தார். சோலைக்கொட்டாய் பகுதி மருத்துவ அலுவலர் தேவி கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விளக்கி கூறினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், செவிலியர் விஜயலட்சுமி, கிராம சுகாதார செவிலியர் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு, கொரோன வைரஸ் காய்ச்சல் குறித்த நோயின் அறிகுறிகள், பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள், சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு வழங்கினர்.