தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரியில், நக்சலைட் காளிதாஸ் வழக்கு விசாரணையை, வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். சிவகங்கை மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் காளிதாஸ் (56). நக்சலைட்டான இவர் மீது தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம், காரிமங்கலம், பாலக்கோடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரசுக்கு எதிராக சதி திட்டம் செய்தல், துண்டுபிரசுரம் விநியோகம் செய்தல், நக்சல் அமைப்புகளுக்கு ஆயுத பயிற்சி அளித்தல் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தர்மபுரி, பாலக்கோடு நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வருகிறது.