என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.பள்ளிப்பட்டியில் இயங்கி வரும் நிவாசா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், தாளநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவர் லஷ்மிசங்கர் வரவேற்றார். கல்லூரி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி பாலு, பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், ராஜாமணி, ஜெயக்குமார் மற்றும் கல்லூரியின் அறங்காவலர்கள் அன்பழகன், கல்லூரி துணைமுதல்வர் பாலமுருகன், நைனாமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இம்முகாம் 7நாட்கள் நடந்தது. முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயபிரபு ஒருங்கிணைந்து நடத்தினார்.

Related Stories: