கடத்தூர், மார்ச் 10: கடத்தூர் அருகே தாளநத்தம் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி, குடிநீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே தாளநத்தம் கிராம ஊராட்சியின் நொச்சிக்குட்டை தா.அய்யம்பட்டி, காவேரிபுரம், குண்டல்பட்டி, கோவில்வனம், காவேரிபுரம், மேலூர் உள்ளிட்ட பகுதியில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.