தர்மபுரி, மார்ச் 6:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் நேற்று வரை 50 கிலோ எடை கொண்ட 338 மூட்டை துவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ ₹58 வீதம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மற்றும் பென்னாகரம் வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கடந்த 24ம்தேதி முதல் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் துவரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையாக துவரை கிலோ ஒன்றுக்கு ₹58 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.