தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிபுரம் புறநகர் பணிமனை முன் வாயிற் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மண்டல தொமுச தொழிற்சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்து பேசினார். தொமுச பணிமனை தலைவர் சண்முகம், விஜயன், சரவணன், சென்னகேசவன், முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும்- செலவுக்குமான பற்றாக்குறையை சரி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.