தர்மபுரி, மார்ச் 2:தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள், மத்திய சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும், மாநில துணை தலைவருமான ஜெயபால் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தாமோதரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கோவிந்தன், மாநில பொருளாளர் அப்துல்சத்தார், மாநில குடும்பநல அறக்கட்டளை செயலாளர் மணி, மாநில துணை தலைவர் குழந்தைவேலு, துணை செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் அனைத்து வீடுகளுக்கும், எந்த நிபந்தனையம் இன்றி புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் 150 எச்பி தாழ்வழுத்த மின் இணைப்புகளை, அதே மின்மாற்றியில் இருந்து 200எச்பி வரையில் உயர்த்தி தாழ்வழுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும்.