கரூர், மார்ச் 1: வெள்ளியணை, வாங்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த வெள்ளக்கவுண்டன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (34). இவரது மனைவி ஜெயசுதா(30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயசுதா, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை கொண்டார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்