பஸ்-லாரி மோதல் 5 பேர் படுகாயம்

அரூர், பிப்.28: அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று காலை 9.15மணியளவில், சேலம் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து புறப்பட்டது. அரூரை அடுத்துள்ள பழையபேட்டை பகுதியில் வந்தபோது, சேலத்தில் இருந்து வந்த லாரி, பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்து மற்றும் லாரியின் கண்ணாடிகள் நொறுங்கியது. மேலும், பேருந்தில் பயணம் செய்த வங்கி ஊழியர் கனிமொழி உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அங்கிருந்தவர்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: