தர்மபுரி, பிப்.27: மதிகோண்பாளையம் அருகே சனத்குமார் நதியை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி அடுத்த வத்தல்மலை நீர்பிடிப்பு பகுதியில் இருந்து சனத்குமார் நதி உருவாகிறது. வத்தல் மலையில் உருவாகும் மழைநீர் அதியமான்கோட்டை, அன்னசாகரம், மதிகோண்பாளையம் ஏரிக்கு வருகிறது. இந்த ஏரிகள் நிரம்பிய பின்னர், கம்பைநல்லூர் சென்று, அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், சனத்குமார் நதி வறண்டு காணப்படுகிறது. தற்போது இந்த நதியில் தர்மபுரி நகராட்சி பகுதிகளான அன்னசாகரம், அக்ரஹாரம் பகுதிகளின் கழிவுநீர் ஓடுகிறது.