எட்டயபுரம், பிப்.27: எட்டயபுரம் பாரதியார் தெருவில் உள்ள ராஜகணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலையில் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், புன்யாவாசனம், வாஸ்து சாந்தி, கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனையுடன் துவங்கியது. அதனைதொடர்ந்து இரவு யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடந்தது.