உடன்குடி அருகே மூதாட்டி தற்கொலை

உடன்குடி, பிப். 27: உடன்குடி அருகே மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சுயம்பு(80). இவர்களது 4 மகன், 2 மகள் ஆகியோர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சுயம்பு தனியாக வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் கவனிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.     தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: