பென்னாகரம், பிப்.26: பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில், தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை காலங்களில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சிகள், விபத்து காலங்களில் உயிரிழப்பை தடுப்பது தொடர்பாகவும், மாரடைப்பு, பக்கவாதம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.